இப்படிக்கு






நாவிலிருந்தோ
நரம்புவழி கடந்து
விரல் நுனி வழியோ
வெளியேறும்
எல்லா வார்த்தைகளும்…

எவரெவரோ உருவாக்கி
எவரெவரோ பயன்படுத்தி
அழகுபடுத்தியும்
எச்சில்படுத்தியும்
எறியப்பட்டவைகளே!

எழுத்தும் வார்த்தையும்
என்னாலும் உங்களாலும்
உருவாக்கப்படவில்லை
இருந்தும்…
அடியில் பதிக்கிறோம்
அவரவர் பெயரை அழகாக!

-

6 கருத்துக்கள்:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஒவ்வொறு வார்த்தையும்

நேற்று யாரோ ஒருவருடையது..

இன்று நம்முடையது..

நாளை யாரே ஒருவருக்கு...

உண்மை....

கூகிள்சிறி said...

உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி இணையத்தளத்தில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். இது தமிழ்மணம் பரப்புகிறோம் என்று கூறிக்கொண்டு உங்கள் படைப்புக்களை உங்களிடமே பணம் கறந்து பிரசுரிக்கும் கீழ்த்தர சேவை இல்லை.முற்றிலும் இலவசமான உங்கள் பங்களிப்பை மட்டுமே கொண்ட சேவை.மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள முகவரிக்கு செல்லுங்கள் http://www.googlesri.com/2012/02/are-you-want-to-writer.html

வானம்பாடிகள் said...

நைசு:)

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

அழகான சொல்லாடல்... நிதர்சனம். வாழ்த்துகள் கதிர்.

ஓலை said...

Aammamilla. :-)

சத்ரியன் said...

உண்மைதான் கதிர்.

இது படிச்சீங்களா?

Related Posts with Thumbnails